Home இலங்கை நெடுந்தீவு அமலனும் றொபின்சனும் காணாமல் போயினர்…

நெடுந்தீவு அமலனும் றொபின்சனும் காணாமல் போயினர்…

by admin

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் எனவும், அவர்களை தேடி முன்னெடுக்கப்பட்ட பணியில் படகு மீட்கப்பட்டுள்ளதாகவும், நெடுந்தீவுப் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிகாட்டுவானிலிருந்து நேறறு (21.02.21) பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய மீனவர்களே இருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.

நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மரியநாயகம் அமலன் மேயன் நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய றொபின்சன் ஆகிய இருவருமே காணாமற்போயுள்ளனர்.

அவர்களை தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்த போது படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More