Home இந்தியா சரத்குமார் -ராதிகாவிற்கு ஓராண்டு சிறை

சரத்குமார் -ராதிகாவிற்கு ஓராண்டு சிறை

by admin

காசோலை மோசடி தொடா்பாக வழக்கொன்றில் நடிகா் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராதிகா, சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் 2014ஆம் ஆண்டில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து தயாாித்த ‘இது என்ன மாயம்’ என்ற படத்தைத் தயாரிப்பதற்காக ரேடியண்ட் என்ற நிறுவனத்திடமிருந்து மே ஒன்றரைக் கோடி ரூபாயை கடனாகப் பெற்றது.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணத்தைத் திரும்பத் தந்துவிடுவதாகக்த் தொிவிக்கப்பட்ட போதும் பணத்தைத் திருப்பி- வழங்கவில்லை. என்பதுடன் வழங்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பியமையினால் ரேடியண்ட் நிறுவனத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இது தொடர்பாக சரத்குமார் மீது ஏழு வழக்குகளும் ராதிகா மீது இரண்டு வழக்குகளும் மஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான லிஸ்டன் ஸ்டீஃபன் மீது 2 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் சரத்குமார், ராதிகா ,பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீஃபன் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மூன்றாண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனை என்பதால், மேல் முறையீடு செய்யும்வரை சிறை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென சரத்குமார், லிஸ்டன் ஆகியோர் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டததையடுத்து, மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமளித்து இருவரது சிறை தண்டனையையும் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

எனினும் ராதிகா நீதிமன்றத்தில் ஆமுன்னிலையாகவில்லை என்பதால் அவருக்கு பிடியாணைபிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்புள்ளதனால் அதிலிருந்து மீண்டவுடன் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாவாா் என அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More