Home உலகம் கொங்கோவில் ரம்ஜான் நாளில் கலவரத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரணதண்டனை

கொங்கோவில் ரம்ஜான் நாளில் கலவரத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரணதண்டனை

by admin

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் கடந்த வியாழக்கிழமை ரம்ஜான் பண்டிகையினையொட்டி தலைநகர் கின்ஷாசாவில் உள்ள மிகப்பெரிய மைதானம் ஒன்றில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலவரத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

நிகழ்ச்சிக்கு யார் தலைமை தாங்கி வழி நடத்துவது என்பது தொடர்பாக முஸ்லிம்களின் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு பின்னர் இது பெரும் கலவரமாக வெடித்தது.‌

கலவரத்தை தடுக்க முயன்ற காவல்துறையினா் மீது இரு தரப்பினரும் சரமாரியாக தாக்குதல் நடத்தியதுடன் காவல்துறை வாகனங்களை தீவைத்து எரித்ததில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டதுடன் மேலும் பல காவல்துறையினா் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த கலவரம் தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டு இது தொடர்பான வழக்கு ஒரே நாளில் விசாரித்து முடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தீர்ப்பை வழங்கிய நீதிபதி குற்றம் சுமத்தப்ப்பட்ட 31 பேரில் 29 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஏனைய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். கொங்கோ நாட்டில் 2003-ம் ஆண்டு முதல் மரண தண்டனைக்கு தடை இருப்பதால், மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனையை அனுபவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More