Home இலங்கை ரிஷாட்டின் வழக்கு விசாரணையிலிருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்

ரிஷாட்டின் வழக்கு விசாரணையிலிருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்

by admin

,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனின்  அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையிலிருந்து  மற்றுமொரு நீதியரசர் விலகியுள்ளார்

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனுக்கள் மீதான விசாரணையிலிருந்து தாd; விலகுவதாக நீதியரசர் மகிந்த சமயவர்தன இன்று (05) அறிவித்துள்ளாா்.

அதற்கமைய, ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரின் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனையிலிருந்து 4 நீதியரசர்கள் விலகியுள்ள நிலையில் மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணைஎதிர்வரும் 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி சட்டவிரோதமாக கைது செய்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என உத்தரவிடுமாறு இந்த மனுக்களின் மூலம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More