Home இலங்கை கோட்டாபய கடற்படை முகாமுக்கெதிராக எதிா்ப்பு நடவடிக்கை

கோட்டாபய கடற்படை முகாமுக்கெதிராக எதிா்ப்பு நடவடிக்கை

by admin

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்குள்ள கோட்டாபய ராஜபக்‌ஸ கடற்படை முகாமுக்காக அபகரிக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கெதிராக கோட்டாபய ராஜபக்‌ஸ கடற்படை முகாமுக்கெதிராக எதிா்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக அப்பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ள நிலையில் அங்கு காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து காணி அளவீடு செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ள நிலையில் கடற்படை முகாமுக்குள் கலகம் அடக்கும் கடற்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More