Home இலங்கை வல்வெட்டித்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு கொரோனா

வல்வெட்டித்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு கொரோனா

by admin

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கு சுகயீனம் காரணமாக உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை காவல்துறையினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் நேற்று 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 6 பேரும் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் இரண்டு பேர் நீதிமன்ற வளாகத்தில் திடீர் சுகயீனம் எனத் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டனர். இருவரும் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More