Home இலங்கை சித்தங்கேணியில் சகோதரர்களால் குடும்பஸ்தர் அடித்துக்கொலை

சித்தங்கேணியில் சகோதரர்களால் குடும்பஸ்தர் அடித்துக்கொலை

by admin

தமது பராமரிப்பில் உள்ள காணிக்குள் அத்துமீறி நுழைந்ததாக குடும்பஸ்தர் ஒருவர் மீது சகோதரர்கள் இருவர் தாக்குதல் மேற்கொண்டதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.    சித்தன்கேணி கலைவாணி வீதியில் இன்று காலை 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் புள்ளி என்று அழைக்கப்படும் 45 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார்.

“வெளிநாட்டில் உள்ளவரின் வயல் காணியை குறித்த இரு  சகோதரர்களும் பராமரித்து வருகின்றனர். இன்றைய தினம் அந்தக் காணியில் மற்றொருவர் உள்ளதாக அறிந்த சகோதரர்கள் இருவரும் அங்கு சென்று அவருடன் முரண்பட்டதுடன் கம்பியால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலேயே சரிந்து உயிரிழந்துள்ளார்” என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் காவல்துறைப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More