Home இலங்கை திருமலைக் கடலில் மரணமான மீனவர் பட்டபந்திகே ஜானக குடும்பத்திற்கு 1 மில்லியன் இழப்பீடு!

திருமலைக் கடலில் மரணமான மீனவர் பட்டபந்திகே ஜானக குடும்பத்திற்கு 1 மில்லியன் இழப்பீடு!

by admin

அண்மையில் ஏற்பட்ட புறவி சூறாவளித் தாக்கம் காரணமாக குறித்த சூறாவளித் தாக்கம் ஏற்பட்டு இரண்டு தினங்களில் கடலிற்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் படகு கவிழ்ந்து உயிரிழந்த திருகோணமலையைச் சேர்ந்த எதிரவீர ஜயசூரிய ஆருகட்டு பட்டபந்திகே ஜானக என்னும் 45 வயதுடைய நபரது குடும்பத்தவருக்கு அரசினால் 1 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கிவைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான கபில நுவன் அத்துக்கோராளவினால் இப்பணம் நேற்றைய தினம் (25.08.21) வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, திருகோணமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் டபிள்யு.ஏ.ஆர்.சேனாரத்ன உட்பட பயனாளி குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More