Home இலங்கை ஈழம் என்றால் என்ன ? சச்சியிடம் காவல்துறையினா் விசாரணை

ஈழம் என்றால் என்ன ? சச்சியிடம் காவல்துறையினா் விசாரணை

by admin

காணாமலாக்கப்பட்டோர் நினைவாக நினைவுத்தூபி அமைத்தமை தொடர்பாக தன்னிடம்காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமலாக்கப்பட்டோர் நினைவாக மறவன்புலவு சச்சிதானந்தத்தினால் கல்வெட்டுக்களுடன் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே பொலிஸ் உயர் அதிகாரிகள் தன்னிடம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தியதாக மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

ஈழம் என்றால் என்ன? என்று அவர்கள் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More