Home இலங்கை யாழில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் பார்வையிட்ட நாமல்!

யாழில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் பார்வையிட்ட நாமல்!

by admin

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்ராஜபக்ஸ இன்றைய தினம் வியாழக்கிழமை  யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முன்னதாக ,  சென் பொஸ்கோ பாடசாலை அருகில் புனரமைக்கப்பட்டு வரும் குளத்தினையும்  , ஐ திட்ட வீதியையும், ஆஸ்பத்திரி வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டத்தையும்,யாழ்.மாநகர சபை புதிய கட்டடத்தையும் பார்வையிட்டார்.

அமைச்சர் நாமல்ராஜபக்ஸ அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்தது.

இதன் போது யாழ்மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீத்நாத் காசிலிங்கம் ,யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன்,யாழ்ப்பாண பிரதேச செயலர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பாசையூரில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் புனரமைக்கப்படவுள்ள நல்லூர் கலைமகள் விளையாட்டு மைதானம்,பல்பரிமாண நகர திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட உள்ள மருதனார்மடம், மத்திய கல்வி அமைச்சின் கீழ் இடம்பெற்று வருகின்ற தெல்லிப்பளை அருணோதயா பாடசாலைக் கட்டடம், வறுத்தலைவிளானில் காணியற்ற குடும்பங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தி திட்டங்கள், நாவற்குழியில் யாழ்ப்பாண – கிளிநொச்சி நீர் விநியோக திட்டத்தையும் பார்வையிடவுள்ளார்.  

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More