Home இலங்கை காட்டுக்கு விறகு வெட்டச் சென்று காணாமல் போன யுவதி மீட்பு

காட்டுக்கு விறகு வெட்டச் சென்று காணாமல் போன யுவதி மீட்பு

by admin

(க.கிஷாந்தன்)

தாயுடன் கடந்த 5 நாட்களுக்கு முன் நுவரெலியா டன்சினன் பகுதியில் காட்டுக்கு விறகு வெட்டுவதற்காக சென்ற 26 வயதுடைய யுவதி மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன. குறித்த யுவதி நுவரெலியா கிகிலியாமான காட்டிலிருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் நுவரெலியாவத்த கீழ் பிரிவில் வசித்த ஜெயபாலன் கற்புகதாரணி என்ற 26 வயது யுவதியாவார்.

நுவரெலியா இராணுவ முகாம் அதிகாரிகள், நுவரெலியா காவல்துறையினா் மற்றும் டன்சினன் தோட்டத் மக்கள் கடந்த 5 நாட்களாக இவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது சாந்திபுர பிரதேச மக்கள் கிகிலியாமான காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த யுவதி காட்டில் கூக்குரல் எழுப்பியுள்ளார் அதன் போது இவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

5 நாட்கள் காட்டில் தனியாக பசியுடன் அலைந்த யுவதிக்கு பிரதேச மக்கள் உணவுகளை வழங்கிய பின் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காணாமல் போயிருந்த யுவதி தெரிவிக்கையில், தாயுடன் டன்சினன் தோட்டத்தில் இருந்து விறகு வெட்ட சென்ற நிலையில் தாயிடமிருந்து வழி தவறி பல பாதைகளில் அங்கும் இங்கும் அலைந்து வீடு திரும்ப முடியாமல் தவித்ததாகவும், இரவு வேளைகளில் அச்சம் காரணமாக எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More