Home இலங்கை தீருவிலில் பற்றைக்குள் இருந்து 217 கிலோ மஞ்சள் மீட்பு – மூவர் கைது

தீருவிலில் பற்றைக்குள் இருந்து 217 கிலோ மஞ்சள் மீட்பு – மூவர் கைது

by admin

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் பற்றைக்குள் 217 கிலோ கிராம் மஞ்சளை பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள், தீருவிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.

அவற்றைக் கடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் 26,28 மற்றும் 46 வயதுகளையுடைய மூவர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறை சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்த காவல்துறையினா், சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்ற நடவடிக்கைக்காக சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று கூறினர்.

நாட்டில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நாட்டுக்குள் சட்டத்துக்கு முரணாகக் கொண்டுவருவதை கடத்தல் என சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More