Home இலங்கை வலி.கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்டவர்கள் விளக்கமறியலில்

வலி.கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்டவர்கள் விளக்கமறியலில்

by admin

காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் , கைது செய்யப்பட்ட  வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட  மூவரையும் எதிர்வரும் 11ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஊரெழு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு   காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர். 

அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்ட போது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் காவல்துறையினருடன் முரண்பட்டார். அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதனால்காவல்துறை உத்தியோகத்தர்கள் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தனர். 


அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரையும் ,தமது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் எனும் குற்றச்சாட்டில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுன்னாகம் மற்றும் மானிப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைகளுக்கு பின்னர் கோப்பாய் காவல்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டனர். 


சம்பவம் இடம்பெற்ற இடம் கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்டது எனவும் , அதேவேளை யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டது என்பதனால் , சந்தேகநபர்கள் கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
கோப்பாய் காவல்துறையினரினால் அவர்கள் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதனை அடுத்து அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More