இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை, 6 வருடங்களின் பின்னர் இன்று (01.11.21) அதிகாலை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL 564) மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது.
1980 களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2015 இல், இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.