Home இலங்கை ஆபத்தான வலயங்களிலிருந்து வௌியேறாதவர்களை பலவந்தமாக வௌியேற்ற நடவடிக்கை

ஆபத்தான வலயங்களிலிருந்து வௌியேறாதவர்களை பலவந்தமாக வௌியேற்ற நடவடிக்கை

by admin

சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஆபத்தான வலயங்களிலிருந்து வௌியேறாதவர்களை பலவந்தமாக வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் சீரற்ற காலநிலையால் 17 மாவட்டங்களை சேர்ந்த 126 பிரதேச சபை பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More