Home இலங்கை 580 ஆண்டுகளுக்கு பின்பு இன்று தோன்றும் நீண்ட சந்திர கிரகணம்

580 ஆண்டுகளுக்கு பின்பு இன்று தோன்றும் நீண்ட சந்திர கிரகணம்

by admin

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. 

ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றநிலையில், இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் இன்று (19) நடைபெற உள்ளது. இலங்கை நேரப்படி இன்று காலை 11.32 மணி முதல் மாலை 5.34 மணிவரை, 6 மணி 2 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும்.

இதற்கு முன்பு நீண்ட சந்திர கிரகணம் 1440-ம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி ஏற்பட்டது. சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த நிகழ்வு மீண்டும் 2,669-ம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி தோன்றும்.

இந்த சந்திர கிரகணத்தை வடகிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட இடங்களில் பார்க்க முடியும்.

இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் சந்திர உதயத்துக்கு பின்னர் மிகவும் குறுகிய நேரம் கிரகணம் தென்படும். எனவும் தமிழகம் உள்பட பிற பகுதிகளில் தெரியாது எனவும் வானியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More