Home இலங்கை காவல்துறையினாின் திடீர் சோதனை-100 பேருக்கெதிராக சட்ட நடவடிக்கை

காவல்துறையினாின் திடீர் சோதனை-100 பேருக்கெதிராக சட்ட நடவடிக்கை

by admin

அம்பாறை  பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை   போக்குவரத்து காவல்துறையினாின்  திடீர் சோதனை நடவடிக்கை  ஆரம்பமாகியுள்ளது. இன்று(19)   காலை முதல் மதியம்   வரை  இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது  கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி,  பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டன.

இத் திடீர் சோதனையில்    சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது,  தலைக்கவசம் அணியாது செல்வது,   ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது,  அதிவேகமாக செல்வது ,குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் முகக்கவசம் அணியாது சென்றவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு எச்சரிக்கை  காவல்துறையினரினால் வழங்கப்பட்டன.

இச்சோதனை நடவடிக்கையானது  கொரோனா அனர்த்தத்தின் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பின்னர் இன்று  அம்பாரை மாவட்ட  பிரதி காவல்துறை மா அதிபரின்  வழிகாட்டலில் இடம்பெற்றது .

குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது 100 பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More