Home இலங்கை “புலிகள், நடைமுறை அரசைக் கட்டி எழுப்பிய கிளிநொச்சியில் வழங்கப்பட்ட தீர்ப்பு, கவலை அளிக்கிறது”

“புலிகள், நடைமுறை அரசைக் கட்டி எழுப்பிய கிளிநொச்சியில் வழங்கப்பட்ட தீர்ப்பு, கவலை அளிக்கிறது”

by admin

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடைமுறை அரசை கட்டியெழுப்பிய கிளிநொச்சியிலே, இன்று (27.11.21) நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி தீர்ப்பு எங்கள் மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது என எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் இன்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடிவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர்,

கட்டளையை தான் மீளப்பெற முடியாதென்றும் ஆனால், ஒரு சில திருத்தங்களுடன் குறிப்பாக கோவில்களிலும், தேவாலயங்களிலும் வழிபடலாம் அன்னதானம் கொடுக்கலாம் என்ற விடயங்கள் சொல்லப்பட்டிருக்கிறதே அன்றி, பொது இடத்தில் செய்ய முடியாது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மணிநேரம் தொடர்ந்து தங்களுடைய சமர்ப்பணங்களை, தமது சட்டத்தரணிகள் சமர்ப்பித்தும், காவற்துறை தரப்பின் சமர்பணங்கள் குறித்தும் வாதாடி பல நீதிமன்றங்களின் தீர்ப்புகள் குறித்து சொல்லப்பட்டும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More