Home இந்தியா ருவிற்றர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியர்!

ருவிற்றர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியர்!

by admin

ருவிற்றர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ருவிற்றர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜக் டோர்சி நேற்று (29.11.21) அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து, ருவிற்றர் நிறுவனத்தின் அடுத்த நிறைவேற்று அதிகாரி யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

டுவிட்டரில் ஆயிரத்துக்கும் குறைவான பணியாளர்கள் இருந்த போது பணியில் சேர்ந்த பராக் கடின உழைப்பால் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக பொறுப்பு வகிக்கும் இந்தியர்களான சுந்தர் பிச்சை (கூகுள்) மற்றும் சத்யா நாதெள்ளா ஆகியோரை தொடர்ந்து பராக் அகர்வாலும் முக்கிய நிறுவனமான ருவிற்றரின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More