Home இலங்கை எரிவாயு களஞ்சிய சாலையை இடமாற்ற கோரி யாழில் போராட்டம்

எரிவாயு களஞ்சிய சாலையை இடமாற்ற கோரி யாழில் போராட்டம்

by admin

நாடு முழுவதும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வரும் நிலையில் தமது உயிருக்கு பாதுகாப்பு தேடும் வகையில் லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்தி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் அமைந்துள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் நிலையத்துக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அப் பிரதேச மக்கள் ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இப்பிரதேச வாழ் மக்களுக்கு பாரிய உயிராபத்து சேதங்களை ஏற்படுத்தக்கூடிய எரிவாயுக் களஞ்சியத்தை பொருத்தமான இடத்திற்கு இடமாற்றுவதை வலியுத்தி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, எமது உயிருக்கு யார் உத்தரவாதம்?, தற்போதைய தரமற்ற எரிவாயு விநியோகத்திற்கு யார் பொறுப்பு?, ஏழைகளின் உயிரா? பண பலமா?, எங்கள் பிள்ளைகளின் உயிருடன் விளையாடாதே, ஆராக்கியமான சந்ததியாக நாம் வாழ வழி விடு போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More