Home இலங்கை சாவகச்சேரியில் 18.670 கிராம் ஹெரோயினுடன் நவாலி வாசி கைது

சாவகச்சேரியில் 18.670 கிராம் ஹெரோயினுடன் நவாலி வாசி கைது

by admin

18.670 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியூடாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சாவகச்சேரி மதுவரி நிலையத்தினருக்கு இரகசிய தகவல் ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை கிடைக்கப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து உதவி மதுவரி ஆணையாளர் தர்மசீலன் மற்றும் மதுவரி அத்தியட்சகர் தங்கராசா ஆகியோரின் வழிநடத்தலில் சாவகச்சேரி மதுவரி நிலைய பொறுப்பதிகாரி ராஜ்மோகன் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அதன் போது , சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நவாலி பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவரை சோதனையிட்டபோது அவரிடம் 18.670 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்க்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More