இந்தோனேசியாவின் தெற்குப் பகுதியில் உள்ள புளோரஸ் கடல் பகுதியில் 7.4 ரிச்டெர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. திமோர்- லெஸ்டேக்கு மேற்கே அமைந்துள்ள புளோரஸ் தீவில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மௌமருக்கு வடக்கே சுமார் 62 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனால் இந்தோனேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதனால் இலங்கைக்கு எந்தவித சு பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.