Home இலங்கை பிரபாகரனின் ஜீப் வண்டியை தற்போது பயன்படுத்துபவா் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

பிரபாகரனின் ஜீப் வண்டியை தற்போது பயன்படுத்துபவா் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

by admin

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி, மஹரகமவைச் சேர்ந்த கபில புலத்கே (வயது 50) என்பவா் தற்போது பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1942 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜீப் வண்டி, இரண்டாம் உலக போரின் போது உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டதாகவும் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட குறித்த ஜீப் வண்டி, யாழ் பருத்தித்துறையில் வைத்து அதன் உரிமையாளரிடமிருந்து விடுதலைப்புலுிகளினால் கைப்பற்றப்பட்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் அந்த ஜீப் வண்டி, கராஜில் இருந்துள்ளது எனவும் அதனது மூன்றாவது உரிமையாளரே அதற்கான ஆவணங்களை காண்பித்து, ஜீப் வண்டியை பெற்று, அதனை மஹரகமவில் உள்ள கராஜில் வைத்து திருத்திய பின் தற்போது பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஜீப் வண்டியை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவருடைய நெருங்கிய பாதுகாவலர்கள், மூத்த தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More