Home இலங்கை மக்கள் தயார் என்றால், IMFடம் கையேந்த அரசாங்கமும் தயார்!

மக்கள் தயார் என்றால், IMFடம் கையேந்த அரசாங்கமும் தயார்!

by admin

சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் யோசனைகளின் அழுத்தங்களை மக்கள் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பார்களாக இருந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல அரசாங்கம் தயாராக இருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்ற நாட்டையே தாம் 2014ஆம் ஆண்டு ஒப்படைத்ததாகவும், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்தது என்கிறார்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள். கடந்த அரசாங்கமும் அங்கு சென்று கடனைப் பெற்றுகொண்டதால் எரிபொருள் விலை சூத்திரம், எரிவாயு, பால்மாக்கள் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் கடந்த அரசாங்கத்தில் அதிகரித்தன.

மக்கள் விரும்பினால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதில் அரசாங்கத்துக்குப் பிரச்சினைகள் இல்லை. 16 தடவைகள், இலங்கை சர்தேச நாணய நிதியத்திடம் சென்றிருக்கிறது. குறிப்பாக நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறையும்போது 11 தடவைகள் சர்தேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

இறுதியாக ஐக்கிய தேசிய கட்சி நாணாய நிதியத்திடம் சென்றிருந்தது. இதனால் 2016 – 2019ஆம் ஆண்டுவரையில் நாணய நிதியத்தின் பிடியிலேயே இலங்கை இருந்தது எனவும் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் யோசனைகள் சரியானதே. எனினும் இலங்கை போன்ற நாடுகளில் அந்த யோசனைகளை நடைமுறைப்படுத்தும்போது மக்கள் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எவ்வாறாயினும் மக்கள் இந்த அழுத்தங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பார்களாக இருந்தால் நாணய நிதியத்திடம் செல்ல அரசாங்கம் தயாராக இருக்கிறது எனவும் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More