Home இலங்கை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சந்தேகநபா் உயிாிழப்பு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சந்தேகநபா் உயிாிழப்பு

by admin

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  ஒருவர்,  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்று (04) உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பொரளை காவல்துறையினா் , கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளனா். கல்முனை, பள்ளியவீதியைச் சோ்ந்த 42 வயதான சல்லி மொஹமட் கலின் (சந்தேகநபர் இலக்கம் 1123) என்பவரே இவ்வாறு உயிாிழந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென சுகயீனமடைந்த மேற்படி சந்தேகநபர், நவம்பர் மாதம் 23 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் டிசம்பர் 5ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையிலேயே, அவர் உயிாிழந்துள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டது   

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More