Home இலங்கை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலர் சந்திப்பு

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலர் சந்திப்பு

by admin

யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத்துக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் ( 7 ) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது . குறித்த சந்திப்பில் , யாழ் . மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி ) திரு.எஸ்.முரளிதரன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் திருமதி எஸ்.சி.என்.கமலராஜன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர் . 


குறித்த சந்திப்பில் பொதுவான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக யாழ் . மாவட்டத்தில் இராணுவத்தினரால் மக்களின் முன்னேற்றம் கருதி பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் கொரோனா இடர்காலத்தில் மக்கள் நலனுக்காக இணைந்து செயற்பட்டமைக்காக மாவட்ட அரசாங்க அதிபர் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார் . 
மேலும் , விவசாய நடவடிக்கைகளில் சேதனப்பசளை உற்பத்தி நடவடிக்கைகள் , வீதி அபிவிருத்தி , நகர சுத்தப்படுத்தல்கள் , மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன . 


அத்துடன், மக்களின் முன்னேற்றம் கருதி அபிவிருத்திக்காக தங்களாலான முழுமையான ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்க தயாராக இருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More