Home இலங்கை பயணப் பொதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

பயணப் பொதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

by admin

தலைமன்னார் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று (8)  சனிக்கிழமை காலை பயணித்த புகையிரதத்தில் உரிமை கோராத பயணப் பொதி ஒன்றில் இருந்து  இராணுவத்தினரால் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

உரிமை கோராத குறித்த பயணப் பொதியில் இருந்து சுமார் 360 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக. தெரிய வருகின்றது.

தலைமன்னாரில் இருந்து இன்று காலை கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் தோட்டவெளி புகையிரத நிலையத்தை சென்றடைந்த போது அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் குறித்த புகையிரதத்தில் ஏறியள்ளனர்.  இதன்போது குறித்த புகையிரதத்தில் உரிமை கோரப்படாத பயணப் பொதி ஒன்று காணப்பட்டுள்ளது.


 எனினும் குறித்த பயணப்பொதியினை எவரும் உரிமை கோராத நிலையில் குறித்த புகையிரதம் மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தை சென்றடைந்தது. எனினும் குறித்த பயணப் பொதிக்கு எவரும் உரிமை கோராத நிலையில் இராணுவத்தினர் அந்த பயண  பொதியை சோதனை செய்த போது குறித்த பயணப் பொதியில் இருந்து “ஐஸ்” போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் 360 கிராம் எடை கொண்டது என தெரிய வந்துள்ளது.


மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காக சௌத்பார் இராணுவத்தினரால் குறித்த “ஐஸ்” போதைப்பொருள் மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More