Home இலங்கை யாழில் விடுதலைப்பொங்கல்

யாழில் விடுதலைப்பொங்கல்

by admin

தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையை வேண்டி  விடுதலைப் பொங்கல் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு முற்றவெளியில்  குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.  


“உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளை  கொண்டாடவிருக்கின்ற வேளையிலே தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இரத்தக்கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றார்கள். 
இந்நிலையில் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும், இந்த விடுதலைப் பொங்கல் ஏற்பாடு செய்யப்பட்டது” என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்திருந்தார்.


அத்துடன், அரசியல் கைதிகளின் உறவுகள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.கடந்த காலத்தில் ஒருசில அரசியல்கைதிகள் விடுவிக்கப்பட்டு அவை பெரியளவில் காட்டப்பட்டன. ஆனால் அதற்குப் பின்னர் எதுவும் நடக்கவில்லை . கடந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை புதிய ஆண்டிலாவது இடம்பெற வேண்டும் என்றார்.


குறித்த பொங்கல் நிகழ்வில், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், அரசியல் கைதிகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More