Home இலங்கை முன்னாள் ஜனாதிபதி – பிரதமர் – காவல்துறை அதிகாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்

முன்னாள் ஜனாதிபதி – பிரதமர் – காவல்துறை அதிகாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்

by admin

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தமது வாழ்க்கைத் துணையை இழந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விசாரணைகளை தாமதிக்காமல் முன்னெடுக்குமாறும் அவா் கோாிக்கை விடுத்துள்ளாா்.

மேலும் தாக்குதலை தவிர்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, எனவும் பிரதமா் தீவிரவாதிகளுக்கு எதிராக மென்மையான நிலைப்பாட்டை கொண்டிருந்தார் எனவும் ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் சில காவல்துறை அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழியேற்படுத்த வேண்டும் என கோருவதாகவும் தற்கொலை செய்து கொண்ட நபர், தமக்கு நீதி கிடைக்காததன் காரணமாக கடும் மன அழுத்தத்துக்குள்ளாகி, தமது பிள்ளைகளையும் தனித்துவிட்டு அவ்வாறானதொரு முடிவை மேற்கொண்டுள்ளதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளாா்..

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More