Home இலங்கை பிரபுக்களின் முனையம் ஊடாக எத்தனோல் கடத்தல் விசாரணை ஆரம்பம்!

பிரபுக்களின் முனையம் ஊடாக எத்தனோல் கடத்தல் விசாரணை ஆரம்பம்!

by admin

டுபாயில் மறைந்திருந்த எத்தனோல் கடத்தலுடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் இலங்கைக்கு சென்ற பின்னர், இராஜாங்க அமைச்சர் மற்றும் உறுப்பினரின் தலையீட்டில் எத்தனோல் கடத்தியுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.எம் சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.

இவர் பிரபுக்களின் முனையம் ஊடாக இரகசியமாக எத்தனோல் கடத்தியமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் அறிவிக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தீவிர விசாரணையின் பின்னர் அது தொடர்பான அறிக்கை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் வழங்கவுள்ளதாக மேஜர் ஜெனரல் ஜி.எம் சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More