Home இலங்கை நாடாளுமன்றிற்கு கடும் பாதுகாப்பு – 113 உறுப்பினர் குழுவுக்கு அரசாங்கம் – ஆசனங்களில் மா்றம்!

நாடாளுமன்றிற்கு கடும் பாதுகாப்பு – 113 உறுப்பினர் குழுவுக்கு அரசாங்கம் – ஆசனங்களில் மா்றம்!

by admin

இன்றைய தினம் நாடாளுமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவற்தறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(04) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் 113 என்ற பெரும்பான்மையை காண்பிக்கும் குழுவுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதேவேளை, ஆளும் தரப்பில் அங்கம் வகித்த பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று சுயாதீனமாக செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன்,நாடாளுமன்ற ஆசனங்களிலும் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More