இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலு சேர்க்கும் வகையில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தது