Home இலங்கை மே 9 போராட்டமும் தீவைப்பும் – 857 சம்பவங்களில் 1,083 பேருக்கு விளக்கமறியல்!

மே 9 போராட்டமும் தீவைப்பும் – 857 சம்பவங்களில் 1,083 பேருக்கு விளக்கமறியல்!

by admin

​மே மாதம் 9 ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், ஒவ்வொரு நாளும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன எனத் தெரிவித்துள்ள காவற்துறை தலைமையகம். விபரமொன்றையும் வெளியிட்டுள்ளது.

இன்று (12.06.22) காலை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (11.06.22) கைதுசெய்யப்பட்ட 22 பேரில், 08 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே.9 மற்றும் அதனை அண்மித்த நாட்களில் இடம்பெற்ற 857 வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2,725 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களில் 1,083 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் காவற்துறை திணைக்களம் இன்று (12.06.22) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More