ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷீன்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முன்னாள் பிரதமர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
நாரா நகரில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவரின் பின்னால் இருந்து இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளபபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக யப்பானிய செய்திகள் தெரிவிக்கின்றன.