Home இலங்கை யாழில் போராட்டம்

யாழில் போராட்டம்

by admin

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிராகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கைது செய்யாதே கைது செய்யாதே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாதே நிறுத்து நிறுத்து அடக்குமுறைகளை நிறுத்து வேண்டும் வேண்டும் ஜனநாயக உரிமை போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More