Home இலங்கை உண்ணாவிரதக் கைதிகளில் ஒருவா் மருத்துவமனையில்

உண்ணாவிரதக் கைதிகளில் ஒருவா் மருத்துவமனையில்

by admin

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் 13 கைதிகளில் ஒருவர் சுகவீனமுற்ற நிலையில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளாா்.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிய போதிலும், அவர்கள் கைவிடாது தொடர்ந்தும் உணவினை தவிர்த்து வருவதாக தொிவித்துள்ள அவா் , அவர்களின் உடல் நிலை தொடர்பில் வைத்தியர்கள் தினமும் கண்காணித்து வருவதாக தொிவித்துள்ளாா்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு வலியறுத்தி கடந்த 6 ஆம் திகதி முதல் அவா்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More