
வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் 15 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என பருத்தித்துறை காவற்துறையினர் தெரிவித்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
தேர்த்திருவிழாவின் போது கிடைக்கப்பெற்ற 7 முறைப்பாடுகளின் அடிப்படையில் 15 தங்கப்பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை காவற்துறையினர் கூறியுள்ளனர்.
Spread the love
Add Comment