Home இலங்கை ராஜபக்சக்களுடன் இனி அரசியல் இல்லை என்கிறார் சுதர்ஷனி!

ராஜபக்சக்களுடன் இனி அரசியல் இல்லை என்கிறார் சுதர்ஷனி!

by admin

மீண்டும் ஒருபோதும் பொதுஜன பெரமுனவுடனோ அல்லது ராஜபக்ச குடும்பத்துடனோ அரசியலில் ஈடுபடப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றின் விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதல், ராஜபக்ச குடும்ப அரசியலில் தனக்கு கடுமையான விரக்தி இருந்ததாகவும், ஆனால் கட்சி உறுப்பினர்களின் அழுத்தத்தால் தான் ராஜபகச குழுவில் இருக்க நேர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் கையாள்வது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More