Home இலங்கை 14 மணித்தியாலங்களுக்குள் 2ஆவது துப்பாக்கிச்சூடு!

14 மணித்தியாலங்களுக்குள் 2ஆவது துப்பாக்கிச்சூடு!

by admin

எல்பிட்டிய யக்கடுவ சந்தியில் நேற்று இரவு (23.12.22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சீதுவ கொட்டுகொட பகுதியில் நேற்று (23.12.22) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் சென்றதந்த இருவர் கலிகனெலியவில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறைஅத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் கொடுகொட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஆணொருவர் உயிரிழந்ததாக காவற்துறையினர்  குறிப்பிட்டனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More