Home இலங்கை இடமாற்றம் தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை!

இடமாற்றம் தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை!

by admin

இடமாற்றம் தொடர்பில் தனக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை என யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய யாழ். மாவட்ட செயலர், அமைச்சு ஒன்றின் செயலாளராக இடமாற்றம் பெற்று கொழும்பு செல்லவுள்ள நிலையில் புதிய யாழ்ப்பாண மாவட்ட செயலராக தற்போதைய கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார். என ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இடமாற்றம் தொடர்பில் எழுத்து மூலம் எந்த அறிவிப்பும் எனக்கு கிடைக்கவில்லை. இந்த வருடத்தோடு ஓய்வு பெறுபவர்களின் இடங்களுக்கு புதிதாக நியமிக்கப்படவுள்ளவர்களின் பட்டியல் ஒன்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அதில் எனது பெயரும் உள்ளதாக அறிந்து கொண்டேன். ஆனாலும் உத்தியோகபூர்வமாக எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால் இடமாற்றம் வழங்கப்படுமா ? என்பது குறித்து என்னால் உறுதியாக கூற முடியாது என்றார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More