Home இலங்கை கல்லுண்டாய் வாள் வெட்டு – 22 வயதான பிரதான சந்தேகநபர் கைது!

கல்லுண்டாய் வாள் வெட்டு – 22 வயதான பிரதான சந்தேகநபர் கைது!

by admin

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்லுண்டாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த முதலாம் திகதி அத்துமீறி உள்நுழைந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு இருந்தது.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதான பிரதான சந்தேக நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை மானிப்பாய் காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More