Home இலங்கை இரு அரசியல் கைதிகள் விடுதலை

 இரு அரசியல் கைதிகள் விடுதலை

by admin

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த  இரண்டு  அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளாா்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு நேற்று முன்தினம்  (01) ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் அடிப்படையில்,  விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்.

இவர்களில் ஒருவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில்    வவுனியா மேல் நீதிமன்றத்தால்   விடுதலை செய்யப்பட்டதாகவும்  மற்றுமொருவா் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்   நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர்  தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More