Home இலங்கை யாழில் இடம்பெற்ற விபத்தில் கொழும்பு வாசி உயிரிழப்பு!

யாழில் இடம்பெற்ற விபத்தில் கொழும்பு வாசி உயிரிழப்பு!

by admin

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்  கொழும்பு மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த பழனி கணேசதாசன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதி (7.02.23)தெல்லிப்பளை பகுதியில் இருந்து காங்கேசன்துறை நோக்கி , யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிறிதொரு நபருடன் சென்ற வேளை, மாவிட்டபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் காயமடைந்தவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி கொழும்பு வாசி உயிரிழந்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More