Home இலங்கை யாழ்.நாவலர் மண்டப விவகாரம் – மேல் நீதிமன்று இடைக்கால தடை

யாழ்.நாவலர் மண்டப விவகாரம் – மேல் நீதிமன்று இடைக்கால தடை

by admin

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்ட போதே நீதிமன்றம் இடைக்கால தடைக் கட்டளை வழங்கியுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிராக யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் தாக்கல் செய்த வழக்கில் யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆஜராகியிருந்த போதே யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் இந்த இடைக்காலக் கட்டளையை வழங்கியது.

குறித்த வழக்கு ஏப்ரல் 26ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More