Home இலங்கை யாழில்.தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில்

யாழில்.தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில்

by admin

இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் , யாழ்ப்பாண  காவல்நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன் போது , தாக்குதலுக்கு இலக்கானவருக்கும் , கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை , அடுத்து அந்நபர் இவர் மீது கைகளால் தாக்கியுள்ளார்.

அதனை அடுத்து தாக்குதலுக்கு இலக்கானவர் காவல் நிலையம் சென்று தாக்குதல் தொடர்பில் முறைப்பாடு செய்த பின்னர் , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார்.  முறைப்பாட்டின் பிரகாரம்  காவல்துறையினா்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More