Home இலங்கை வடக்கு வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை

வடக்கு வைத்தியசாலைகளில் ஆளணி பற்றாக்குறை

by admin

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில்  2000 பேருக்கான ஆளணி  பற்றாக்குறை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த,சத்தியமூர்த்தி தெரிவித்தார் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட சுகாதார உதவியாளர்களுக்கான ஆளணி பற்றாக்குறையாக காணப்படுகிறது. அதேவேளை தாதியர்கள், மருத்துவமாதுக்கள் என ஏனைய   ஆளணி பற்றாக்குறைகளும் காணப்படுகின்றது.

தற்போதுள்ள நிலையில் புதிதாக உள்வாங்குவதில் தாமதம் காணப்படுகின்றபடியினால் எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சின் ஊடாக இந்த நியமனங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்,

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More