Home இலங்கை வரணியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

வரணியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

by admin

நண்பனை வீட்டில் இறக்கி விட்டு, தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருத்தவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், கொடிகாமம் , வரணி சுட்டிபுரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை (05.07.23) அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் , வடமராட்சி தேவரையாளி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய புஸ்பராசா ராஜ்குமார்  என்பவரே உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரியை சேர்ந்த நண்பரை அவரது வீட்டில் இறக்கி விட்டு, மோட்டார் சைக்கிளில் வடமராட்சியில் உள்ள தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த வேளை சுட்டிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி, விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் கொடிகாம காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More