Home இலங்கை ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் மரணம்

ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் மரணம்

by admin

 

இம்முறை ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் அங்கு மரணித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  நேற்றையதினம்  (04)   கொலன்னாவையை சேர்ந்த ஹாஜியானி ஒருவர் மாரடைப்பு காரணமாக மக்காவில் மரணித்துள்ளதுடன்  கொழும்பு 14-ஐ சேர்ந்த ஹாஜி ஒருவர் மதீனாவில்   இடம்பெற்ற விபத்தொன்றின் போது மரணித்ததாகவும்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  கடந்த வாரம்  குருணாகலை – பானகமுவ பகுதியை சேர்ந்த ஹாஜி ஒருவர்  மாரடைப்பு காரணமாக மினாவில் உயிரிழந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.   இம்முறை சுமார் 3500 பேர் ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More