Home இலங்கை நட்டஈடு   செலுத்தினாா் மைத்திரி

நட்டஈடு   செலுத்தினாா் மைத்திரி

by admin

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை 15 மில்லியன் ரூபாய் நட்டஈடு    வழங்கியுள்ளார் என உயர் நீதிமன்றில் பிரேரணை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அவா் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நடைபெற்ற உயிா்த்த ஞாயிறுத்  தாக்குதலினை தடுக்க தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறியுள்ளதாக தொிவித்து   உயிரிழந்தவர்களுக்காக 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், அவா் இதுவரை 15 மில்லியன் ரூபாயை    வழங்கியுள்ளார் என உயர் நீதிமன்றில் பிரேரணை ஊடாக அறிவித்துள்ளது. மேலும் எஞ்சிய தொகையான 85 மில்லியன் ரூபாயை 2024 ஆம் ஆண்டு  ஜூன் 30 ஆம் திகதி முதல்,  வருடத்துக்கு 8.5 மில்லியன் ரூபாய் வீதம் 10  தவணைகளாக செலுத்தப்படும் என அவர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை,  மைத்திரிபால சிறிசேன ,  தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் மாதாந்தம் 97,500 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதாகவும்,  நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்   54,285 ரூபாயையும் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More