Home இலங்கை வாகனத்தில்  மறைத்து கொண்டு செல்லப்பட்ட   150 கிலோ எடை கொண்ட கடலாமை  மீட்பு 

வாகனத்தில்  மறைத்து கொண்டு செல்லப்பட்ட   150 கிலோ எடை கொண்ட கடலாமை  மீட்பு 

by admin

மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் உயிருடன் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்ட அரிய வகை கடலாமையை மன்னார் விசேட   காவல்துறைப் புலனாய்வு பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (1) மாலை மீட்டுள்ளது டன் வாகன சாரதியையும் கைது செய்துள்ளனர்.

வாகனம் ஒன்றில்  கடலாமை  கடத்தப்படுவதாக     காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த  ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார்     காவல்துறை பிரிவுக்குட்பட்ட செளத்பார் பிரதான வீதி ரெலிக்கொம் சந்தி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில்  கடலாமை  மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

மீட்கப்பட்ட கடலாமை நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட உள்ள நிலையில் தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கடலாமையை வாகனத்தில் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வாகன சாரதி மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More